ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2022 08:05
சாத்துார்: ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலை 5:00 மணிக்கு நடந்தது.
ஏழாயிரம் பண்ணை நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். மே 8ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது நாள் தோறும் அம்மன் காமதேனு, சிம்மம், பல்லக்கு, சப்பரம், பூப்பல்ல், கு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது கடந்த திங்கள்கிழமை மே 16ம் தேதி பொங்கல் விழா நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஓம் சக்தி பராசக்தி என கோஷமிட்டு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6:10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.