பதிவு செய்த நாள்
01
ஆக
2012
11:08
சாத்தூர்:சாத்தூர் நென்மேனி புனித இன்னாசியார் ஆலயதேர்பவனியில்,ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் ஆலய விழா, கடந்த 22ல் கொடியேற்றுடன் துவங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று அதிகாலையில் நடந்தது. பாதிரியார் பிரான்சிஸ் ,நற்செய்தியின் ஒளியில் இன்னாசியார் என்ற தலைப்பில், பேசினார். இதையொட்டி நேற்று முன் தினம் இரவு 8.15மணிக்கு ,மதுரை பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமையிலும்,இரவு 11.30 க்கு பாதிரியார் ஞானப்பிரகாசம் தலைமையிலும் திருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. பாதிரியார் முரளி ஆனந்த் மறையுறை வழங்கினார். பாதிரியார்கள் கிளாரன்ஸ் தினேஷ்,குழந்தைசாமி,மதன்பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று பகல் 12.30 மணிக்கு பாதிரியார் அடைக்கலராஜா கொடியை இறக்கினார். மதுரை,திருநெல்வேலி,நாகர்கோவில் பகுதிகளில் இருந்து வந்திருந்த பலர் முடிகாணிக்கை செலுத்தியும்,குழந்தைகளுக்கு காதுகுத்தியும்,பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டனர்.