பதிவு செய்த நாள்
01
ஆக
2012
11:08
பேய்க்குளம் : ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்குட்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று இரவு நடக்கிறது. கடந்த மாதம் 22ம் தேதி ஆடித்தபசு திருவிழாவை கடந்த மாதம் 22ம் தேதி ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 10 நாட்களாக குருகால்பேரி, பெருமாள்குளம், சாலைப்புதூர், சங்கரநயினார்புரம், விராக்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், பழனியப்பபுரம், கோமாநேரி, வடக்கு இளமால்குளம், மீரான்குளம் ஆகிய ஊர் மக்கள் சார்பாக தினமும் பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது.
நேற்று 10ம் திருநாளை முன்னிட்டு ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பஞ்.,தலைவர் விஜயலெட்சுமி ஸ்ரீதர் தலைமையில் சரோஜா அம்மாள் மற்றும் சுற்றுவட்டார அன்னையர்கள் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று தபசு திருவிழாவை முன்னிட்டு காலை சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம், இரவு 8 மணிக்கு கச்சேரி நடக்கிறது.
முன்னதாக காலையில் அம்பாள் தபசு கோலம், மாலையில் சீர்வரிசை கொண்டுவருதல், இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை ஆலய பக்தர்கள் சங்கம், திருவிளக்கு பூஜை கமிட்டியினர், தபசு விழா கமிட்டியினர் ஆகியோர் செய்து வருகிறார்கள்.