Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக விழா .. ... வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீன குருபூஜை விழா : நாற்காலி பல்லக்கில் குரு மூர்த்தங்களுக்கு எழுந்தருளி வழிபாடு
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீன குருபூஜை விழா : நாற்காலி பல்லக்கில் குரு மூர்த்தங்களுக்கு எழுந்தருளி வழிபாடு

பதிவு செய்த நாள்

22 மே
2022
01:05

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன குரு பூஜை விழாவை முன்னிட்டு 27வது குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் குருமூர்த்தங்களுக்கு எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

மயிலாடுதுறை தர்மபுரத்தில் 16ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட சைவ ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆதீன குருமுதல்வர் ஶ்ரீ குருஞானசம்பந்தர் குருபூஜை விழா 11 நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலாவும், திருக்கல்யாண வைபவம், திருத்தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 10ம் நாளான குருபூஜையை முன்னிட்டு நேற்று காலை தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மடத்தில் இருந்து நாற்காலி (சவாரி ) பல்லக்கில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவாரம் இசைக்க மேல குரு மூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து குருமகாசன்னிதானம் வனதுர்க்கை அம்மன் கோவில் மற்றும் நட்சத்திர தென்னை ஆகியவற்றை வழிபாடு செய்தார். பின்னர் நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி திருமடத்தை வந்தடைந்தார். பல்லக்கு தூக்குவதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆதீன திருமடத்தின் கட்டளைத் தம்பிரான், தருமபுரம் ஆதீன கோவில்களில் தலைமை கண்காணிப்பாளர் மணி, ஆதீன கல்லூரி முதல்வர் சாமிநாதன், ஆடிட்டர் குரு சம்பத் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை மகேஷ் குருக்கள் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சொக்கநாதர் வழிபாடு, ஸ்ரீ சபாநாயகர் தீர்த்தம் கொடுத்தல் மற்றும் பஞ்சமூர்த்திகள் ரிஷபாரூடராய் எழுந்தருளி காவிரியில் தீர்த்தவாரி ஆகியவை நடைபெற்றன. மாலை மீண்டும் திருமடத்திலிருந்து நாற்காலி பள்ளத்தில் வடக்கு மூர்த்தங்களுக்கு தருமையாதீனம் எழுந்தருளி வழிபாடு நடத்தினார். 11ஆம் திருநாளான இன்று 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா வரும் பிரசித்திபெற்ற பட்டினப்பிரவேசம், அதனைத் தொடர்ந்து ஞானக் கொலு காட்சியும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar