பதிவு செய்த நாள்
01
ஆக
2012
11:08
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவல பூஜை இன்று (ஆக., 1) நடக்கிறது.காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
* காரிமங்கலம் அக்ரஹாரம் ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சத்திய நாராயண பூஜை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை டாக்டர் பன்னகசைனம், உதயசங்கர் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலையில் பக்தர்கள் கிரிவலம் நடக்கிறது. ஏற்பாடுகளை குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.