Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்தாண்டுகளுக்கு பின் குழந்தைகளை ... ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ.1.18 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் திருவிழா நிறுத்தப்பட்டதால் கண்ணீர் விட்டு கதறி அழுத மக்கள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஆக
2012
10:08

சின்னசேலம்: சின்னசேலம் அருகே பாண்டியங்குப்பத்தில் கோவில் தேரோட்டம் நிறுத்தப்பட்டு, சாமிகளை கோவில் கருவறைக்குள் கொண்டு சென்றதால், மக்கள் கதறி அழுதனர். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் கிராமத்தில் சோலையம்மன், கருப்பையா, அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடக்க இருந்தது. அப்போது, தேர் வடம் பிடிப்பது தொடர்பாக இரண்டு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. விழுப்புரம் போலீசார் இரு தரப்பினரை அழைத்து நடத்திய பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாததால், தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவியதால், டி.எஸ்.பி., சரவண குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தேரோட்டம் நிறுத்தப்பட்டு, திருவிழா நின்று போனதால் நேற்று, ஆற்றங்கரை கோவிலில் இருந்து சோலையம்மன் மற்றும் கருப்பையா, அய்யனார் சாமிகளுக்கு பூஜைகள் செய்தனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் கோவில் கருவறைக்குள் உள்ள பாதாள அறையில் வைக்க ஊர்வலமாக சாமி சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதைப் பார்த்து, கிராம மக்கள் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar