பதிவு செய்த நாள்
27
மே
2022
05:05
செஞ்சி: மேல்சேவூர் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
செஞ்சியை அடுத்த மேல்சேவூர் முத்து மாரியம்மன், செங்கழுநீர் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகின நடந்தது. மாலை 4 மணிக்கு யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், கணபதி பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இரவு 9 மணிக்கு பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோபூஜை, வேதபாராயணம், இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 8 மணிக்கு நாடி சந்தானம், ஸ்வாமி காப்பு கட்டுதல், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனையும் தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடந்தது. 9.40 மணிக்கு முத்துமாரியம்மன், செங்கழுநீர் விநாயகர் விமானம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மகா அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா குழுவினர், திருமலை, திருப்பதி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.