பதிவு செய்த நாள்
27
மே
2022
06:05
சேந்தமங்கலம் அருகே பூச்சனாங்குட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மோகனுார் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து, காந்திபுரம் மாசிமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு, பூச்சனாங்குட்டை காளியம்மனுக்கு, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் ஊர்வலம் சென்றனர். பின் காளியம்மனுக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் செய்துள்ளனர்.