ராணிப்பேட்டை மாவட்டம், அனந்தலை பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்படுகின்றன. இதில், அரசு விதிமுறைகளை மீறி அளவுக்கதிகமாக வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை உடைக்கின்றனர். இதனால், அருகிலுள்ள நந்திமேல் சிவலிங்கம் அமைந்துள்ள குகைக்கோவிலில் அதிர்வுகள் ஏற்பட்டு அழியும் நிலையில் உள்ளது. புகார் செய்தாலும், அதிகாரிகள் மாமுல் வாங்கிக் கொண்டு கண்டுகொள்வதில்லையாம். கோவில் நிர்வாகத்தினர் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.