பதிவு செய்த நாள்
27
மே
2022
06:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.34 கோடி கிடைத்தது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் 13 நாட்களுக்கு பின் மே 24ல் சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் துணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ஒரு கோடியே 34 லட்சத்து 47 ஆயிரத்து 439 ரூபாயும், தங்கம் 116 கிராம், வெள்ளி ஒரு கிலோ 560 கிராம் காணிக்கையாக கிடைத்தது. இதில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, செல்லம், முனியசாமி, கலைச்செல்வம், ஊழியர்கள் பலர் காணிக்கையை எண்ணினார்கள். மே 10, 24ல் திறந்த கோயில் உண்டியலில் ரூ. 2.96 கோடி காணிக்கை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.