பதிவு செய்த நாள்
27
மே
2022
06:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களாக அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோயில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், பழனி ஆண்டவர் கோயில், மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் சுரேஷ், கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் ராமசாமி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் ரூ. 18.77, 578, தங்கம் 130 கிராம், வெள்ளி 1கிலோ 580 கிராம் இருந்தது. கண்காணிப்பாளர்கள் பாலலட்சுமி, சுமதி, தக்கார் பிரதிநிதி மாலதி கலந்து கொண்டார். கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயா வேதபாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.