Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொடரும் கோவிலில் உண்டியல் திருட்டு : ... மோச்சேரியில் துரியோதனன் படுகளம் விமரிசை மோச்சேரியில் துரியோதனன் படுகளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதம் : பக்தர்கள் அச்சம்
எழுத்தின் அளவு:
குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதம் : பக்தர்கள் அச்சம்

பதிவு செய்த நாள்

28 மே
2022
03:05

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதமடைந்ததால்  அச்சமடைந்துள்ள பக்தர்கள் உடனடியாக அதனை சீர்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தங்கி சென்றதாக கூறப்படுகிறது. இத்தளத்தில் உள்ள சுவாமியை சூரியன், சந்திரன், சனி பகவான் மற்றும் நலன் மகாராஜா  ஆகியோர் வணங்கி தங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்றுள்ளனர். இத்தலத்தில் சனிபகவானின் சாப, தோஷ நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது. இங்கு  சனீஸ்வர பகவான் நின்ற கோலத்தில், கைகூப்பியபடி, அமிர்த கலசத்தை கையில் ஏந்தியவாறு பொங்கு சனீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சியளித்து சனி ப்ரீத்தி மற்றும் பரிகார தெய்வமாக சனீஸ்வர பகவான் விளங்குகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லாததால் கொடிமரம் இல்லாமல் இருந்துள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போது புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்து 14 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த மார்ச் ஆறாம் தேதி கோவிலுக்கு பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருப்பணி பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கோவிலில் உள்ள செப்புக் கவசமிட்ட கொடி மரத்தின் நடு பாகம் கடந்த ஆண்டு சேதமடைந்துள்ளது. அதனை சரி செய்யாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கொடிமரத்திற்கு சாரம் அமைத்து கொடிமரம் கீழே சாயாதவாறு நிலை நிறுத்தியுள்ளனர். கொடிமரம் சேதமடைந்தது மக்களுக்கு ஆகாது என்பதால் உடனடியாக சேதமடைந்த கொடிமரத்தை சீர் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கொடிமரத்தின் மேல் உள்ள கொடி சேதமடைந்து உடைந்து தொங்கியுள்ளது. இதனைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்,   கொடிமரத்தை புதிதாக செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவன் கோவில் கொடிமரம் சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar