பதிவு செய்த நாள்
29
மே
2022
03:05
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நேற்று நடைபெற்றது.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் மூலநாதருக்கு தாராபிஷேகம் நடைபெற்று வந்தது.
அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றதையொட்டி,நேற்று மூலநாதருக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடந்தது.இதனையொட்டி, காலை 6.00 மணிக்கு பால விநாயகர், வேதாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, 10.30 மணிக்கு யாகசாலை பூஜை, 108 கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் மூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், லட்சுமி நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.