பதிவு செய்த நாள்
29
மே
2022
10:05
கூடலூர்: மசினகுடி அருள்மிகு ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி கோவில் மஹா சண்டியாகம் சிறப்பாக நடந்தது.
மசினகுடி அருள்மிகு ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி கோவில் மஹா சண்டியாகம் பூஜை மற்றும் திருவிழா, 27ம் தேதி காலை 7:00 மணிக்கு துவங்கியது. தொடந்து, நேற்று, வரை சண்டியாகம் பூஜை நடந்து. அதன்படி நேற்று காலை 7:00 மணிக்கு நடந்த சாண்டி யாகத்தில், ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, நவாவரன வேதிகார்ச்சனை, வேதினை அர்ச்சனன், தீப பூஜை, தேவி மகாத்மியம் ஹோமம், சௌபாக்கிய திரவிய சமர்ப்பணம், சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, தம்பதி பூஜை, வடுக பூஜை, சுவாசினி பூஜை, கோபூஜை, வாஸ்திராஹுதி, மஹா பூர்ணாஹூதி, கலராபிஷேகம், மகா தீபாராதனை. பிரசாதம் வழங்குதல் மற்றும் முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு பூஜைகளும் ஆராதனைகளும், மாலை 4:00 மணிக்கு ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி தேர் ஊர்வலம் நடைபெற உள்ளது.