தமிழகத்தில் முதன் முறையாக 71 அடி உயரத்தில் நவ காளியம்மன் சிலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2022 09:05
புன்செய்புளியம்பட்டி: தமிழகத்தில் முதன் முறையாக புன்செய்புளியம்பட்டி அருகே, நவகாளி அம்மனுக்கு, 71 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி அருகே, காராப்பாடி–அணையப்பாளையம் சாலையில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் விநாயகர், நவ காளியம்மன், கருப்பராயனுக்கு சன்னதி உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, புனரமைப்பு பணி நடந்து வருகிறது. கோபுரம் புதிதாக கட்டப்பட்டு, மூலவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோவிலில் தமிழகத்தில் முதன்முறையாக, 71 அடி உயரத்துக்கு நவகாளி அம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஆனி மாதம் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக நவகாளி அம்மனுக்கு இங்கு தான், 71 அடி உயரத்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.