பெண்ணாடம், பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது. இதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை நடந்தது. பகல் 11:00 மணியளவில் சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது. 11:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.