திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2022 09:05
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு மூலவர் பெருமாள் திருமாலிருஞ்சோலை கள்ளழகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள் புறப்பாடு நடந்து. மாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வசந்த மண்டபத்தில் சுவாமி எழுத்தருளி, வசந்த உற்சவத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.