சிவகாசி சிவன் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2022 10:05
சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் வைகாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரு வருடங்களாக கொரானா தொற்றினால் சிவன் கோயிலில் பெரிய திருவிழா எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் வைகாசி பிரம்மோற்சவம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவு 8:00 மணிக்கு பூத, காமதேனு, ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 7 ல் நடைபெறும்.