Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஸ்ரீரங்கம் அழகிய மணவாளப் ... வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
14ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
14ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

31 மே
2022
11:05

ஒட்டன்சத்திரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா குளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆலம்பாளையம் பாலசுப்பிரமணியன் தோட்டத்தில் பழமையான சத்திரத்தில் 14ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.இப்பழமையான சத்திரம் குறித்து அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மதுரை பாண்டிய நாடு ஆய்வு மையத்திற்கு தெரிவித்தார்.

மையத்தின் ஒட்டன்சத்திரம் அலுவலகத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் வீ.அரிஸ்டாட்டில், மூ.லட்சுமணமூர்த்தி ஆகியோர் சத்திரத்திரத்திலிருந்த 14ம் நுாற்றாண்டு கல்வெட்டுக்களை ஆய்வு செய்தனர்.பின் அவர்கள் கூறியதாவது: இந்த பழமையான சத்திரம் வழிப்போக்கர்கள் தங்க அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 துண்டுக்கல்வெட்டுகள் உள்ளன. இவை தொடர்பற்று காணப்படுகின்றன. சத்திரம் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட போது கல்வெட்டுகள் இடம் மாறி இருக்க வாய்ப்புள்ளது.

இதன் மறு கட்டமைப்பு காலம் 16ம் நுாற்றாண்டாக இருக்கலாம்.கல்வெட்டில் குறுநில மன்னன் கலிய அதியமான் பெயர் இடம் பெற்று உள்ளது. ராஜராஜேஸ்வரி என்ற நபர் கலிய அதியமானின் கீழ் கட்டுப்பட்டவர். இந்த சத்திரத்தை பாதுகாத்தார். பொறுப்பாளராக இருந்தார் என கல்வெட்டுகள் கூறுகின்றன.இச்சத்திரத்தில் வழிப்போக்கர்களுக்கு மூன்று நேரமும் உணவு வழங்கப்பட்டிருக்கிறது. வழிப்போக்கர்கள் மட்டுமல்லாது உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு இச்சத்திரம் செயல்பட்டது கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar