விழுப்புரம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2022 04:05
விழுப்புரம்: விழுப்புரம் பாகர்ஷா வீதி மீன் மார்க்கெட் அருகே உள்ள அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், உற்சவர் அங்காளம்மன் சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.