செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரமம் செய்தனர். இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபமேற்றி அம்மனை வழிபட்டனர். பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் , உதவி ஆணையர் , ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் மற்றும் அறங்காவலர்கள் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி. எஸ்.பி., பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். சென்னை, வேலுார், விழுப்புரம், புதுச்சேரி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.