அன்னூர்: சொக்கம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை துவங்குகிறது. சொக்கம்பாளையத்தில், பழமையான மாகாளியம்மன் மற்றும் அரச மரத்து பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மதியம் திருவிளக்கு வழிபாடுடன் துவங்குகிறது. நாளை மாலை முதற்கால வேள்வி பூஜையும், மலர் வழிபாடும் நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வியும், எண்வகை மருந்து சாத்துதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 7:00 மணிக்கு மாகாளியம்மன், பிள்ளையார் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரி ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகள் அருளுரை வழங்குகின்றனர். இதையடுத்து மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடக்கிறது.