அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவில் திருப்பணி செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் 2009ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் முடிந்ததால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பக்தர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று பெருமாள் கோவில் வளாகத்தில் நடந்தது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், கோவில் முழுவதும் பஞ்ச வர்ணம் பூசுவது, சுற்றுச்சுவர் அமைப்பது, கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள பழைய வளாகத்தை அகற்றிவிட்டு கோவில் வாகன மண்டபம் கட்டுவது, கொடிக்கம்பம் நிறுவுவது உள்ளிட்ட திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், முன்னாள் அறங்காவலர்கள் சின்னச்சாமி, ரங்கசாமி மற்றும் கேசவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.