பதிவு செய்த நாள்
31
மே
2022
06:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், வைகாசி அமாவாசையையொட்டி அருணாசலேஸ்வரருக்கு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி அமாவாசையையொட்டி, உற்சவ மூர்த்தி உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், 1,008 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தலா, 108 லிட்டர் தேன், நெய், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், 108 கிலோ விபூதி அபிஷேகம் நடந்தது. மேலும், அபிஷேக பொடி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.