பதிவு செய்த நாள்
01
ஜூன்
2022
09:06
உடுமலை; உடுமலை அருகேயுள்ள சின்னபொம்மன் சாளை, ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று, கொடுமுடி, கோடந்துார், தெய்வ குளம், திருமூர்த்திமலை, மீன் குளத்தி பகவதியம்மன், வனபத்ரகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.தொடர்ந்து, சக்தி கும்பம் அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, பக்தர்களின் ஓம் சக்தி கோஷம் முழங்க, கிராம வீதிகளில் ஊர்வலமாக பக்தர்கள் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு, 9:00 மணிக்கு, சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி, வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தன.இன்று காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம், மதியம், 3:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.