காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேணுகோபாலன் திருக்கோலத்தில் பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.