இடைச்சியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2022 02:06
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள கழனிவாசலில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
காரைக்குடி கழனிவாசலில் உள்ள இடைச்சியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சின்ன மாட்டில் 10 ஜோடிகளும், பெரிய மாட்டில் 5 ஜோடிகளும் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 8 கி.மீ., தூரமும், சின்ன மாட்டிற்கு 6 கி.மீ., தூரமும் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.