ஸ்கந்தகிரி சுப்ரமணிய சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் : காஞ்சி விஜயேந்திரர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2022 05:06
செகந்திராபாத் : செகந்திராபாத், ஸ்கந்தகிரியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஏப் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நித்ய மண்டல விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவை முன்னிட்டு அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. சுப்ரமணிய சுவாமியின் கர்ப்ப க்ருஹத்தில் சஹஸ்ர சங்காபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். வரும் 3ம் தேதி முதல் பிரம்மோத்ஸவம் நடைபெறவுள்ள நிலையில், தெலுங்கானா மாநில யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், இந்த ஸ்கந்தகிரி சுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார். வரும் 13ம் தேதி இங்கு காஞ்சி மகாஸ்வாமியின் ஜெயந்தி உற்சவம் நடைபெறுகிறது.