சோழவந்தான், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் ஜூன் 6 இரவு 7:35 முதல் 9:00 மணிக்குள் நடக்கிறது. 17 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை 9:00 மணிக்கு சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு காமதேனு, யாழி உள்ளிட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கும்.ஜூன் 14ல் பால்குடம், அக்னிச்சட்டி, பூப்பல்லக்கு, 15ல் பூக்குழி, 21ல் தேரோட்டம், 22ல் வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.