பதிவு செய்த நாள்
02
ஜூன்
2022
06:06
அவிநாசி: காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பியநல்லூர் அருகே உள்ள கந்தம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்திகளுக்கு வருகின்ற வெள்ளியன்று காலை 9மணிக்குமேல் 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக பெரு விழா நடைபெறுகின்றது. இதனையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக யாகசாலைக்கு தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து சென்றனர். முன்னதாக, காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்தி கோவிலில், நேற்று காலை மஹா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. கும்பாபிசேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.