மயிலாடுதுறை : ஏ கிளியனூர் காளஹஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சுகனூர் என்றழைக்கப்படும் ஏ.கிளியனூர் கிராமத்தில் பஞ்ச பூதங்களாக திகழும் பரமேஸ்வரன் பல நாமங்கள் தாங்கி மூர்த்தி தலம் தீர்த்தம் என்று சொல்லக்கூடிய காளஹஸ்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 500 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வழிபாட்டு தலமாக இந்த இத்தலம் பின்னர் இயற்கை சீற்றங்களால் சிதிலம் அடைந்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லிங்கம், நந்தி ஆகியவை கிடைக்கப் பெற்றதை அடுத்து கிராம மக்கள் கோவில் அமைக்க திட்டமிட்டு திருப்பணிகளை தொடங்கினர் திருப்பணிகள் முடிவுற்றது எடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு பரிவார தெய்வங்களான விநாயகர் அய்யனார் செல்லியம்மன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி சமேத காளகஸ்தீசுவரர் சுவாமி கோவில் விமானத்திற்கு கடங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.