பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா ஜூன் 6ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 05:06
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழா ஜூன் 6., இல் துவங்கி ஜூன் 15., வரை நடைபெற உள்ளது.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றம் ஜூன் 6., இல் துவங்கி ஜூன் 15., வரை நடைபெற உள்ளது. ஜூன் 7.,ல் முதல் தினமும் காலையில் தங்கப் பல்லக்கில் புறப்பாடு நடைபெறும். மாலையில் தங்க மயில், காமதேனு ஆட்டுக்கடா,வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை என நாள்தோறும் வாகன புறப்பாடு நடைபெறும்.
ஆறாம் நாள் திருவிழாவான ஜூன் 11., ல் வள்ளி தெய்வயானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். ஏழாம் நாள் திருவிழாவான ஜூன் 12., ல் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 15., இரவு கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா உற்சவம் நிறைவு பெறுகிறது. நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் பக்திச் சொற்பொழிவு நடைபெற உள்ளது. கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.