திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தங்க ரிஷபவாகனத்தில் சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2022 05:06
காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவிழாவை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 20ம் தேதி துவங்கியது.தினம் விநாயகர், சுப்ரமணியர், அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உற்சவம் வீதியுலா, செண்பகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் நடந்தது. பிரமோற்சவ விழாவின் நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில் தங்க ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா முக்கிய வீதிகளில் சாமி வீதி உலா நடந்தது.விழாவின் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான நாளைகாலை 5.30மணிக்கு 5தேர் திருவிழா நடைபெறுகிறது. வரும் 10ம் தேதி சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது.வரும் 11ம் தேதி தெப்போற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.