நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை ஆய்வு: ஒத்துழைக்க மீண்டும் தீட்சிதர்கள் மறுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2022 05:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆய்வுக்கு சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பொது தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 2வது நாளாக இன்று(ஜூன் 08) ஆய்வுக்கு சென்ற போது, கோவில் செயலாளர் அலுவலக சாவி இல்லை எனக்கூறினர். இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.