Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகிஸ்தானில் ஹிந்து கோவில் சிலைகள் ... முட்டம் மஹாபலீஸ்வரர் கோயிலில் திருப்பணி தொடங்கியது முட்டம் மஹாபலீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வரன் கோயிலில் தேரோட்டம் : பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனீஸ்வரன் கோயிலில் தேரோட்டம் : பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2022
04:06

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று 5 தேர் திருவிழாவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுந்தனர்.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்ச விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் உற்சவம் நடைபெற்றது.கடந்த 2ம் தேதி அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம், கடந்த 3ம் தேதி செண்பகதியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5தேர் திருவிழாவில் செண்பகத்தியாகராஜர், நிலோத்தம்பாள், வினாயகர், முருகன், சண்டியோஸ்வர் ஆகிய 5 தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.தேர் திருவிழாவை போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா,சட்டபேரவை தலைவர் செல்வம், சிவா எம்.எல்.ஏ.,ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். 5தேர்கள் தெற்கு வீதியில் புறப்பட்டு வடக்கு, மேற்குவீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தியாகராஜா தியாகராஜா கேஷங்கள் முழுங்க 5தேர்களை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுந்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான், துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், பா.ஜ.க.,மாநில துணை தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.10ம் தேதி இன்று சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது.நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar