Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வரன் கோயிலில் ... சோழர் கால உமாமகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் சோழர் கால உமாமகேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முட்டம் மஹாபலீஸ்வரர் கோயிலில் திருப்பணி தொடங்கியது
எழுத்தின் அளவு:
முட்டம் மஹாபலீஸ்வரர் கோயிலில் திருப்பணி தொடங்கியது

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2022
05:06

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பழைமை வாய்ந்த முட்டம் மஹாபலீஸ்வரர் கோயிலில் திருப்பணி தொடங்கியது.

மயிலாடுதுறை தாலுகா முட்டம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பெரியநாயகி சமேத மஹாபலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு மூன்றடி நிலம் கேட்டு விண்ணையும், மண்ணையும் பாதத்தால் அளந்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். ஐஸ்வர்யங்களை இழந்த மகாபலி சக்கரவர்த்தி, பின்னர் முட்டம் சுயம்பு மஹாபலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்து இழந்த ஐஸ்வர்யங்களை மீட்டதாக புராண வரலாறு கூறுகிறது. 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில் சிதிலமடைந்து தற்போது ஒரு கீற்றுக் கொட்டகையில் சுவாமி, அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இக்கோயில் திருப்பணி இன்று தொடங்கியது. இதையொட்டி, நேற்று  விக்னேஸ்வர பூஜை, பஞ்சாட்சரம் ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பூர்ணாகுதி நடைபெற்று கடங்கள் புறப்பட்டது. தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை விசாரணை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருப்பணி தொடங்கியது.
நிகழ்ச்சியை, இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில செயலாளர் ராம.நிரஞ்சன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் முட்டம் சி.செந்தில்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். உபயதாரர்கள் பாலகிருஷ்ணன், வைத்தியநாதன், மாவட்ட பிராமணர் சங்கத் தலைவர் பாபு, பாஜக மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் குருசங்கர், இந்து மகா சபா சுதாகர், சத்தியமூர்த்தி, ஊராட்சித் தலைவர் கயல்விழிசரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பழைமை வாய்ந்த இக்கோயிலில் விரைவில் திருப்பணிகள் முடிவுற்று, குடமுழுக்கு நடைபெறவுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar