வாலாஜாபாத்:கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில், 7.88 லட்சம் ரூபாய், உண்டியலில் வருவாய் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், குரு கோவில் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக் கோவில் உண்டியல், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் முத்துரத்தினவேலு, காஞ்சிபுரம் அறநிலையத் துறை வழக்கு ஆய்வாளர் அலமேலு முன்னிலையில், திறக்கப்பட்டது. இதில், 7.88 லட்சம் ரூபாய், 20 கிராம் தங்கம் என, வருவாய் கிடைத்துள்ளது. கோவில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.