பதிவு செய்த நாள்
10
ஜூன்
2022
06:06
கோபி:பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 40.47 லட்சம் ரூபாய்க்கு, நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்தது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,300 ரூபாய் முதல், 2,320 ரூபாய் வரை விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,230 ரூபாய் முதல், 2,240 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 1,783 மூட்டைகளை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம், ௪0.47 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.