பதிவு செய்த நாள்
10
ஜூன்
2022
06:06
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பூங்குளம் கிராமத்தில் ஆடுங்களரி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை,மகா கணபதி பூஜை, தன பூஜை,நவக்கிரஹ,கணபதி ஹோமம்,பூர்ணாஹூதி,கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம்,முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.பின்பு இரணடாம்,மூன்றாம் கால யாகபூஜை, மந்திர ஸ்தாபனம் நடந்தது.பின்பு நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை,கோ பூஜை,நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது.கருட வாகன புறப்பாட்டுக்கு கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.ஆடுங்களரி அய்யனாருக்கு 21 வகையான அபிஷேகங்கள், சிறப்புபூஜைகள் நடந்தது. முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.