கடமலைக்குண்டு: கண்டமனூர் மூங்கிலணை காமாட்சி அம்மன், செல்வவிநாயகர், பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, சுதர்சன ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், மங்கள இசை, தீர்த்தம் தெளிதல், தீபாராதனை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக சைவசமய சிவாலய திருப்பணி வித்தகர் பாண்டி முனீஸ்வரர் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் முழு கோடி ராமர் வழக்கறிஞர் கணேசன் கோயில் பூசாரி வேல்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.