கல்லல் சாய்பாபா கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2022 08:06
கல்லல்: கல்லலில், சாய்பாபா கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
கல்லலில் உள்ள கற்பக விநாயகர், சாய்பாபா, நாகநாதசுவாமி கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 9 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்துசாந்தி, கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்கால பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு யாத்ராதானம் கடம் புறப்பாடு நடந்தது. காலை 9.50 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், தொடந்து மூலவர் கும்பாபிஷேகமும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆறுமுகம் தேவகி குடும்பத்தார்கள் செய்திருந்தார். பிச்சை குருக்கள், பிரகாஷ் பட்டர் கலந்து கொண்டார்.