Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோயில் ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த நடைபாதை சேதம் : சமூக விரோதிகள் அட்டகாசம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த நடைபாதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாகம்: மருதமலையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வைகாசி விசாகம்: மருதமலையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
03:06

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், கந்த சஷ்டி திருவிழா, தைப்பூசத்திருவிழா, வைகாசி விசாகம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வைகாசி விசாகத்தை ஒட்டி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மங்கல வாத்தியங்களுடன் கோமாதா பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. அதன்பின், 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமிக்கு, பால், சந்தனம், தயிர், நெய் உள்ளிட்ட திரவங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலையில், சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி கவசத்திலும், மாலையில், ராஜ அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உற்சவ மூர்த்திகளான, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், ரத்தின அங்கி அலங்காரத்தில், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகாசி விசாகத்தைஒட்டி, ஏராளமான பக்தர்கள், பால் காவடி மற்றும் பால் குடங்கள் எடுத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்க தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். வைகாசி விசாகத்தை ஒட்டி, மருதமலையில் நேற்று, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், அடிவாரத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar