தூத்துக்குடி : புதியம்புத்தூர் சித்திவிநாயகர், உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா, மற்றும் உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. புதியம்புத்தூர் இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சித்திவிநாயகர் கோயில் உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோயில் வருஷாபிஷேகவிழா மற்றும் கொடை விழா கடந்த 30ம் தேதி அம்மனுக்கு பரிவார சுவாமிகளுக்கும் மாக்காப்பு சாத்தி பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து 31ம் தேதி அதிகாலை கணபதிஹோமம் மற்றும் வருஷாபிஷேகம் நடந்தது. 31ம் தேதிகாலை சித்திவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அன்று மதியம் அபிஷேக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை தீர்த்தம் எடுத்துவருதல நிகழ்ச்சியும், இரவு மாவிளக்கு எடுத்தவருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை நடந்தது. கடந்த 1ம் தேதி காலை பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை புதியம்புத்தூர் இல்லத்துபிள்ளைமார் சமுதாய விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.