ஆனி மாத பூஜைகளுக்காக சபரிலை நடை திறந்தது: இன்று முதல் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2022 08:06
சபரிமலை, ஆனிமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. இன்று முதல் பக்தர்களுக்கு தரிசனம் நடத்தலாம். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கினார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகம், நெய்யபிேஷகம் நடைபெறும். பின்னர் கணபதிேஹாமம் உள்ளிட்ட வழக்கமான பஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் உஷபூஜை, களபாபிேஷகம், உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை மறறும் படிபூஜை நடைபெறும். 19–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இன்று காலை முதல் ஆன்லைனின் முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள் தரிசனம் நடத்த முடியும். சபரிமலை புதிய செயல் அலுவராக கிருண்குமார், நிர்வாக அதிகாரியாக சாந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றனர்.