செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2022 04:06
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.
செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன், செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டி துவங்கினர். 12ம் தேதி மாலை பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு ஊரணி பொங்கலும், இரவு மாரியம்மன், பூவாத்தம்மன், செல்லியம்மன் பூங்கரகம் ஊர்வலமும் நடந்தது. 13ம் தேதி பகல் 12 மணிக்கு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. மாலை மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கலும், இரவு 9 மணிக்கு கும்ப படையலும், தொடர்ந்து பூங்கரகம் மற்றும் சாமி வீதி உலாவும் நடந்தது. இன்றுகாலை பூங்கரக ஊர்வலமும் மாலை மஞ்சள் நீராட்டும், காப்பு களைதலும் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிருஷ்ணாபுரம் பொது மக்கள் செய்திருந்தனர்.