சிங்கம்புணரி: சிங்கம்புணரி வைகாசி விசாக திருவிழாவையொட்டி பூப்பல்லக்கில் சேவுகப்பெருமான் ஐயனார் பவனி வந்தார்.
ஜூன் 5ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் வைகாசி விசாக திருவிழா பத்து நாள் மண்டகப்படியாக நடந்தது. ஜூன் 9ம் தேதி திருக்கல்யாணம், 10 ம் தேதி கழுவன் திருவிழா, 13 ம் தேதி தேரோட்டம் நடந்தது. திருவிழாவின் கடைசி நாளான ஜூன் 14 ம் தேதி அடைக்கலம் காத்த நாட்டார்களின் மண்டகப்படியை முன்னிட்டு பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது. மல்லிகைப்பூ மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரவு 2:00 மணிக்கு பூரணை புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் ஐயனார் எழுந்தருளினார். அதிகாலை 4:00 மணிக்கு பூப்பல்லக்கு உற்சவம் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து 5:10 மணிக்கு கோயில் முன்பாக வந்தடைந்தது. பூப்பல்லக்கு புறப்படுவதற்கு முன்பும் வந்து சேர்ந்த பின்பும் மங்கல வாத்தியம் நாதஸ்வர கச்சேரி இசைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பூப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டிருந்தன மல்லிகைப்பூ பிரசாதமாக வழங்கப்பட்டது.