Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த ... ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் 100வது திருவாசக முற்றோதல் விழா ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் 100வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது
எழுத்தின் அளவு:
காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2022
10:06

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் வருகின்ற 23ம்தேதி கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு பிரத்தியேகமாக 33 யாக குண்டங்களும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு பத்து குண்டங்களிலும்  முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.   ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரையில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு கோயிலில் வருகின்ற 23-ஆம் தேதி ஸ்வர்ணபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா  நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த 16-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கி   ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கு பிரசன்னா அபிஷேகம், யாழி வாகனத்தில்  தீர்த்த சங்க்ரஹணம் உள்ளிட்ட பல்வேறு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.. தொடர்ந்து  ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு பிரத்தியேகமாக 33 யாக குண்டங்களும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கு 10 யாக குண்டங்களில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க முதல்கால யாகசாலை பூஜைகள் எஜமான சங்கல்பத்துடன் துவங்கியது.  அங்குரார்பணம், காப்பு கட்டும் விழாவான ஆச்சார்ய ரக்க்ஷாபந்தனம், கும்பாலங்காரம், காலகர்ஷணம் நடைபெற்றது. தொடர்ந்து காமாட்சி அம்மனை கலசத்தில் ஆவாகனம் செய்து யாகசாலையில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சியான  மூலமந்திர ஜபம் செய்து கடஸ்தாபனம் செய்யப்பட்டது. திருமுறை பாராயணம், வேத பாராயணம்,  வேத மந்திரங்கள் முழங்க முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்று பூரணாகுதி மகாதீபாரதனை நடைபெற்றது.     மயிலாடுதுறை வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் 124 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளை செய்தனர். 23ம் தேதி காலை 10மணிலிருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேக பெருவிழா நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு பக்தர்களை பரவசப்படுத்தும் கண்கவர் பரதநாடிட்டிய நிகழ்வுகளும் அரங்கேறியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ஆடிப்பூரம் நிறைவு விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்  சிவகங்கை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிபூரம் திருவிழா யொட்டி அம்மனுக்கு மகா தீபாரதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar