Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த ... ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் 100வது திருவாசக முற்றோதல் விழா ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் 100வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது
எழுத்தின் அளவு:
காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2022
10:06

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் வருகின்ற 23ம்தேதி கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு பிரத்தியேகமாக 33 யாக குண்டங்களும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு பத்து குண்டங்களிலும்  முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.   ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரையில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு கோயிலில் வருகின்ற 23-ஆம் தேதி ஸ்வர்ணபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா  நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த 16-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கி   ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கு பிரசன்னா அபிஷேகம், யாழி வாகனத்தில்  தீர்த்த சங்க்ரஹணம் உள்ளிட்ட பல்வேறு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.. தொடர்ந்து  ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு பிரத்தியேகமாக 33 யாக குண்டங்களும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கு 10 யாக குண்டங்களில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க முதல்கால யாகசாலை பூஜைகள் எஜமான சங்கல்பத்துடன் துவங்கியது.  அங்குரார்பணம், காப்பு கட்டும் விழாவான ஆச்சார்ய ரக்க்ஷாபந்தனம், கும்பாலங்காரம், காலகர்ஷணம் நடைபெற்றது. தொடர்ந்து காமாட்சி அம்மனை கலசத்தில் ஆவாகனம் செய்து யாகசாலையில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சியான  மூலமந்திர ஜபம் செய்து கடஸ்தாபனம் செய்யப்பட்டது. திருமுறை பாராயணம், வேத பாராயணம்,  வேத மந்திரங்கள் முழங்க முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்று பூரணாகுதி மகாதீபாரதனை நடைபெற்றது.     மயிலாடுதுறை வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் 124 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளை செய்தனர். 23ம் தேதி காலை 10மணிலிருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேக பெருவிழா நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு பக்தர்களை பரவசப்படுத்தும் கண்கவர் பரதநாடிட்டிய நிகழ்வுகளும் அரங்கேறியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar