பாலமேடு: பாலமேடு அருகே இடையபட்டி சங்கிலி கருப்புச்சாமி கோயில் உற்ஸவ விழா நடந்தது. பம்பை, உறுமி மேளம், வாணவேடிக்கையுடன் சுவாமி திருவீதிகளில் எழுந்தருளினார். பக்தர்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் வழிபாடு செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.