Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இழந்ததை மீட்டுத்தரும் ஈஸ்வரன்! சிவாலயங்களில் சண்டிகேஸ்வரருக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
மீசையுடன் காட்சி அளிக்கும் பெருமாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2022
05:06

பார்த்தசாரதி கோலத்தை மையமாகக் கொண்ட கோயில் சென்னை திருவல்லிக்கேணி. இங்கு நின்ற கோலம் – பார்த்தசாரதி பெருமாள், அமர்ந்த கோலம் –  நரசிம்மர், சயனக்கோலம் – மன்னாதர் ஆகிய மூவரையும்  கண்டு களிக்கலாம். யாதவ குலத்தில் பிறந்தவர் கண்ணன் என்பதால் மீசையுடன் காட்சி அளிக்கிறார் பெருமாள். இவரது வலக்கை சங்கினை ஏந்தி இருக்க, இடக்கை தனது திருவடியை பக்தனுக்கு நினைவுறுத்தும் வகையில் வரதமுத்திரையுடன் உள்ளது. போரில் பங்கு பெற மாட்டேன் எனக் கூறிய காரணத்தால் சக்கரம் இல்லை.  பெருமாளுக்கு வலது புறத்தில் ருக்மணி காட்சி தருகிறாள். அருகில் அண்ணன் பலராமர், தம்பி சாத்யகி, மகன் பிரக்த்யும்னன், பேரன் அநிருத்தன், தோழர் அக்ரூரர் உள்ளனர்.  


பார்த்தசாரதி பெருமாளின் உற்ஸவ மூர்த்தியை முதலில் காண்பவர்களுக்கு திகைப்பு உண்டாகும். ஏனெனில் முகம் தழும்பு நிறைந்ததாக உள்ளது. அது பக்தனுக்காகப் பரமன் ஏற்றுக் கொண்ட தழும்புகள். போரில் அர்ஜுனனுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பீஷ்மரின் கணைகளைக் கண்ணனே ஏற்றதால் உண்டானவை அவை. எனினும் தழும்பையும் மீறி கண்ணனின் புன்னகை நம்மை மயக்குகிறது. பேயாழ்வார், திருமழிசையாழ்வார்.  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்  தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் இங்கு கண்ணனின் அருள் பெற்றிருக்கிறார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
சேலையூரை அடுத்த மகாலட்சுமி நகரில், 49 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீ தேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
அ கத்தியமுனிவர் குடகுமலையில் ஓரிடத்தில் கமண்டலத்தை வைத்துவிட்டு லிங்க பூஜை செய்தார். அப்போது ஒரு ... மேலும்
 
temple news
அன்னை அருள்புரியும் திருத்தலங்கள் இப்பாரத பூமியில் பல உண்டு. அதில் முக்கியமாக 51 சக்தி பீடங்கள் என்று ... மேலும்
 
temple news
ஆனி,- ஆடி மாதங்களில் தான் மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் ஓடத் துவங்கும். மழைக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்ட ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமை என்பது லட்சுமி தேவிக்கு மிகவும் முக்கியமான நாள். இந்த நாளில் கிராம்பு பரிகாரங்களை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar