Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் ... இன்று சர்வதேச யோகா தினம்: மதுரை மக்களின் யோகா அனுபவம் இன்று சர்வதேச யோகா தினம்: மதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரம்பூர் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பெரம்பூர் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2022
10:06

மயிலாடுதுறை: பெரம்பூர் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் வேண்டுவதை வேண்டிய மாத்திரத்திலேயே அம்பாள் அருளுவதால் இக்கோவிலில் தினந்தோறும் திரளான பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதலை அம்பாளிடம் முன்வைப்பதும், அவை நிறைவேறியதும் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இவ்வாண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு படுகள நிகழ்ச்சியும் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வீரசோழன் ஆற்றில் இருந்து பம்பை, மேள வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு வீதி உலாவாக கோவிலுக்கு வந்தது இதனையடுத்து கோவிலுக்கு எதிரே இருந்த தீக்குண்டத்தில் கரகம் இறங்க அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து  நேர்த்திக்கடன் செலுத்தி அம்பாளைத் தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் பழனிவேல், சிவக்குமார், சங்கர், ராஜேந்திரன், முருகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடைபெற்றது.கோவை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar